சர்வதேச ஊடகங்களில் பேசப்படும் இலங்கையின் இணையவழி கல்விமுறை

Date:

இலங்கையில் இணையவழி கற்கையில் இணைந்துகொள்வதற்காக சில கிராம பகுதிகக்ளைச் சேர்ந்த மாணவர்கள் அடர்த்தியான புதர்கள் ஊடாக, சிறுத்தைகள் யானைகளை கடந்து மூன்று கிலோமீற்றர் தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. பொகிட்டிவாயவை சேர்ந்த ஆசிரியையும் 45 மாணவர்களும் இணைய சிக்னலை பெறுவதற்காக உயரமான பாறையொன்றின் மீது ஏறுகின்றனர்.
உலகையே உலுக்கும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகளிற்கு செல்லமுடியாத தனது மாணவர்களிற்கான பாடங்களை கற்பிப்பதற்காக தகவல்தொழில்நுட்ப ஆசிரியை நிமாலி அனுருதிக இவ்வாறு சிக்னல்களை பயன்படுத்துகின்றார். அந்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்களும் ஆசிரியரின் இணையபாடங்களை பெற்றுக்கொள்வதற்காக அந்த ஆபத்தான பயணங்களைமேற்கொள்கின்றனர். அது மட்டுமன்றி அவர்கள் அனைவரிடமும் கையடக்க தொலைபேசியோ அல்லது மடிக்கணிணியோ இல்லை. நான்கு ஐந்து சிறுவர்கள் ஒரே கையடக்க தொலைபேசியை அல்லது மடிக்கணிணியை பயன்படுத்துகின்றனர்.
மேலும், அவர்களின் பெற்றோர்கள் அநேகமானோர் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் – அவர்களும்தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து உயரமான பாறைகளை நோக்கி செல்கின்றனர். தனது ஆறாம்வகுப்பு மகனுடன் செல்லும் எச்எம் பத்மினிகுமாரி சிறுவர்கள் நாளொன்றிற்கு இரண்டு தரம் உயரமான மரங்களில் ஏறுகின்றனர் இது தங்களிற்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
அந்த கிராமம் அடிப்படை வசதிகள் அற்றதாக காணப்படுகின்றது,அந்த கிராமத்தின் பிள்ளைகள் 16 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கின்றனர் அந்த பாடசாலை தற்போது மூடப்பட்டுள்ளது. லுனுகலவில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடர்ந்த காட்டில் உள்ள மர உச்சிக்கு அழைத்து செல்கின்றனர்.அந்த மரம் 30 அடி உயரமானதாக காணப்படுகின்றது,அதிலிருந்தாலே இணைய வசதிகளை பெறமுடியும்.அவர்கள் ஒவ்வொவராக தங்கள் பாடங்களை பதிவேற்றிக்கொள்கின்றனர்.
அல் ஜசீரா 

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...