தேசிய முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளருக்கு பிணை!

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீவிபத்துக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த கப்பலின் தேசிய முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளர் சஞ்சீவ லங்காபிரிய சமரநாயக்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியதை அடுத்து கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிமதி தமித் தொட்டவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

 

அதனடிப்படையில் சந்தேக நபரை 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டின் அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சந்தேக நபர்கள் வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...