நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

Date:

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினை நேற்றைய தினம் (15) மாலை 4.30 மணியளவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வைபவ ரீதியாக திறந்து வைத்ததோடு, அதன் பணிகளை பார்வையிட்டார்.

 

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்ட குறித்த மின் உற்பத்தி நிலையமே இவ்வாறு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

 

மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கே.திலிபன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

இதில் திணைக்கள தலைவர்கள்,அமைச்சின் செயலாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக குறித்த நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...