நாடாளுமன்றத்தில் எம்.பிக்களை சந்திக்க பொதுமக்களுக்கு விரைவில் அனுமதி!

Date:

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்காக முன்னர் வழங்கப்பட்டிருந்த அனுமதியினை மீண்டும் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் சந்திப்புக்கான அறைகளை ஒதுக்குவதற்கு சபை முதல்வர் தினேஸ் குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாக சபை முதல்வர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுமக்களை சந்திப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 அறைகள் ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.

 

இந்தநிலையில், 7 அறைகளை முதற்கட்டமாக ஒதுக்குவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக படைக்கல சேவிதரினால் சபை முதல்வருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் சந்திப்பதற்கான அறைகள் திறக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...