நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வி வழங்க வேண்டும் | ஆதிவாசிகளின் தலைவர்

Date:

நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வி வழங்க வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு அதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் தெரிவித் துள்ளார்.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்குச் சமமான முறையில் கல்வி வழங்கப்படுவதில்லை என ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இணையத் தள கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகுவதால் எதிர்காலத்தில் நாட்டின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பிள்ளைகள் மிகவும் உதவியற்றவர்களாகி விடுவார் கள் என ஊரு வரிகே வன்னிலஅத்தோ தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் மிக விரைவாகத் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...