மேலும் இரண்டு இராஜாங்க அமைச்சுகளில் சீராக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது!

Date:

நாட்டில் மேலும் இரண்டு இராஜாங்க அமைச்சுக்களில் சீராக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, சேதன பசளை உற்பத்தி ஊக்குவிப்பு, விநியோக ஒழுங்குப்படுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவு, மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம்,உருளைக்கிழங்கு உற்பத்தி ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...