வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த இராணுவ அதிகாரி கைது

Date:

மின்னேரியா தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை ஹபரண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இராணுவ அதிகாரி ஹபரண பொலிஸ் நிலையத்தில் இன்று (01) காலை சரணடைந்துள்ளதாகவும், கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி வனவிலங்கு அதிகாரிகளின் கடமைக்கு குறித்த இராணுவ அதிகாரி இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இரு தரப்பிலும் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பின்னிணைப்பு – 12.40 pm) மின்னேரியா தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...