ஹரீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் | விசாரணைகள் ஆரம்பம் 

Date:

இலங்கையில் அரங்கேறிய உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோவிடம் சிஐடியினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதாக சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானிஅபயசேகர தெரிவித்திருந்தார் என ஹரின்பெர்ணாண்டோ தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே சிஐடியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
புலனாய்வு பிரிவை சேர்ந்த அந்த நபரை சிஐடியினர் கைதுசெய்து விசாரணை செய்தனர்,எனினும் இராணுவபுலனாய்வு பிரிவினர் அவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் என ஹரீன்பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பிலேயே சிஐடியினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...