அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தீடீர் உயர்வு!

Date:

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, ஒரு கிலோ மைசூர் பருப்பு 250 ரூபாவுக்கும், ஒரு கிலோ சீனி 215 ரூபாவுக்கும், ஒரு கிலோ இலங்கை உருளைக்கிழங்கு 300 ரூபாவுக்கும், இந்திய உருளைக்கிழங்கு 240 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 135 ரூபாவுக்கும், சிறிய வெங்காயம் 400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அறியமுடிகிறது.

மொத்த வியாபாரிகள் இவற்றிற்கான விலையை அதிகரித்துள்ளதன் காரணமாக, சீனி, கிழங்கு, வெங்காயம் மற்றும் நெத்திலி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சதொசவில் 115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி நேற்று (25) 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதோடு, மைசூர் பருப்பு கிலோவொன்றின் விலை 250 ரூபா வரை அதிகரித்திருந்தது.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் சதொசவுக்கு ஒரு தொகை வெள்ளை சீனி கிடைக்கவுள்ளதாகவும், இவ்வாறு கிடைத்த பின்னர் தற்போதைய விலையை விடவும் குறைந்த விலையில் மக்களுக்கு சீனியை பெற்றுக்கொள்ள முடியுமென சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...