கொவிட் பரவலில் இலங்கை 15ஆவது இடத்தில் இருந்தும் அரசாங்கம் இன்னும் அதன் பாரதூரத்தை விளங்கவில்லை – எதிர்க் கட்சித் தலைவர்!

Date:

கொடூரமான கொரோனா பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் இருந்தாலும், மனச்சாட்சியற்ற ஆட்சியாளர்கள் அதை இன்னும் கவனத்திற் கொண்டு செயற்படவில்லை என எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை சுகாதார விஷேட நிபுணர்களின் தீர்க்கமான எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு, அரசாங்கம் தனது பொறுப்பற்ற, தன்னிச்சையான அரசியல் நிகழ்ச்சி நிரலை மட்டுமே செயல்படுத்தி வருகிறது.

குறுகிய காலத்திற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதோடு,

அவர்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படாவிட்டால், இலங்கையில் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் 30,000 ஆக உயரும் என்று எதிர்வு கூறியுள்ளது.

இந்த பேரழிவின் தருணத்தில் இருக்கும் கடுமையான ஆபத்தை கருத்தில் கொண்டு, எமது வல்லுநர்கள் நாட்டை ஒரு குறுகிய காலத்திற்கு முடக்க வேண்டும் என்று எச்சரித்தனர், ஏனென்றால் மக்களின் வாழ்க்கை வேறு எதையும் விட எங்களுக்கு முக்கியம் என்றதாலாகும் என அவர் கூறினார்.

இருப்பினும், ஒரு நாளைக்கு இறப்புகளின் எண்ணிக்கை 150 ஐத் தாண்டினாலும்,இனம்காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டினாலும், அவர்கள் எடுக்கும் முடிவுகளிலிருந்து அரசாங்கம் சிறிதளவேனும் கருத்திற் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...