சந்தையில் சீனி தொடர்பாக மதிப்பாய்வு செய்ய நடவடிக்கை!

Date:

சீனி களஞ்சியசாலைகள் உள்ள பகுதிகள் மற்றும் சந்தையில் சீனி தொடர்பான மதிப்பாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.நுகர்வோர் அதிகார சபையினால் இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய. தமது அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சகல களஞ்சியசாலைகளிலும் உள்ள சீனி தொகை தொடர்பில் இதன் போது தரவுகள் சேகரிக்கப்படவுள்ளதாக குறித்த அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் ஊடகத்துக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

சீனியினை பதுக்கி வைத்து அதனை அதிக விலைக்கு சந்தையில் விற்பனை செய்வதன் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, கடந்த தினங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் ஊடாக 12,255 மெற்றிக் டன் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்காக நாட்டின் சில பகுதிகளில் உள்ள மக்கள் சதொச விற்பனையகங்களின் முன்னர் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...