ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய ரணில் விக்கிரமசிங்க!

Date:

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கும் இடையில் இன்று(17) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

அதன்போது, கொவிட் தொற்றை ஒழிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை செயற்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் முன்னாள் பிரதமரினால் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்ததாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் ஒழிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வ கட்சித்தலைவர்களையும் அழைக்குமாறு ஐ.தே.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...