தகனசாலை நெருக்கடியால் கொவிட் சரீரங்கள் தேங்கியுள்ளமை குறித்து ஆராய விசேட குழு!

Date:

நாட்டில் பதிவாகும் அதிகளவான கொவிட் மரணங்கள் காரணமாக தகனசாலைகளின் சேவைகளும் அதிகரித்துள்ளன.

அந்தவகையில், பேருவளை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் அளுத்கம உள்ளிட்ட தகனசாலைகளில் பகலில் மாத்திரமின்றி இரவு வேளைகளிலும் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் கொவிட்19 தொற்றினால் மரணிப்போரின் சரீரங்கள் தேங்கியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

உதவி காவல்துறை அத்தியட்சகர் அடங்கிய விசேட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...