தகனசாலை நெருக்கடியால் கொவிட் சரீரங்கள் தேங்கியுள்ளமை குறித்து ஆராய விசேட குழு!

Date:

நாட்டில் பதிவாகும் அதிகளவான கொவிட் மரணங்கள் காரணமாக தகனசாலைகளின் சேவைகளும் அதிகரித்துள்ளன.

அந்தவகையில், பேருவளை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் அளுத்கம உள்ளிட்ட தகனசாலைகளில் பகலில் மாத்திரமின்றி இரவு வேளைகளிலும் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் கொவிட்19 தொற்றினால் மரணிப்போரின் சரீரங்கள் தேங்கியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

உதவி காவல்துறை அத்தியட்சகர் அடங்கிய விசேட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...