நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் | இராணுவத் தளபதி

Date:

தற்போதைய நிலைமை தொடர்பில் மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியேறுமாறும் பொருத்தமான முகக் கவசங்களை அணிந்து செல்லுமாறும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து வகையான முகக்கவசங்களும் இக்காலத்துக் குப் பொருந்தாது என வைத்தியர்களும் விசேட நிபுணர்களும் கூறுகின்றனர். கொவிட் நோயாளர்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மிக வேகமாக பரவக்கூடிய பிறழ்வு நாட்டிலுள்ளது என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உலக நாடுகள் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவ தற்காக எடுத்திருக்கும் நடவடிக்கைகளை கொவிட் ஒழிப்பு தேசிய செயலணி என்ற வகையில் முன்னெடுத் துள்ளோம். எனினும், பொதுமக்கள் சுய ஒழுக்கத்துடனும் பாதுகாப்புடனும் செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் தற்போதைய நிலையை மாற்ற முடியும் என சவேந்திர சில்வா மேலும் கூறினார்.
இதனிடையே, முழுமையாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அதற்கான அட்டையை தம்வசம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார். அனைவரையும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லையென்றால் சிற்சில இடங்களுக்குச் செல்வதற்கு உங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம்.
நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், சில இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை பரிசீலிப்பதற்கான சந்தர்ப்பம் எதிர்காலத் தில் உருவாகக் கூடும். செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்துக்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...