நாட்டில் நேற்றைய தினம், 248,656 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் 

Date:

இலங்கையில்  23,135 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளதோடு, 1,021 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 153,678 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி இரண்டாவது தடவையும், 69,041 பேருக்கு முதலாவது தடவையும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 711 பேர் முதலாவது தடவையாக பைஷர் தடுப்பூசியை பெற்றுள்ளதோடு, 75 பேர் இரண்டாவது தடவையாக பெற்றுள்ளனர்.

இந்த தரவுகளின் அடிப்படையில் நாட்டில் இதுவரையில் 11 இலட்சத்து 27 ஆயிரத்து 8 பேர் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதலாலது தடவையாக பெற்றுள்ளனர். அவர்களில் 861,744 பேர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 87 இலட்சத்து 94 ஆயிரத்து 593 பேருக்கு சைனோபாம் முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளதோடு அவர்களில் 20 இலட்சத்து 61 ஆயிரத்து 775 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...