பாடசாலைகள் திறக்கப்படுமா? | அமைச்சர் G.L.பீரிஸ்

Date:

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, பாடசாலைகளை திறக்க முடியாது என கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார் .

மேலும், நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் அசாதாரய சூழ்நிலை காரணமாக, முன்னர் திட்டமிட்டவாறு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் பாடசாலைகளை திறக்க முடியாது என அவர் கூறியுள்ளார். கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த போதிலும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும், சுகாதார தரப்பு அனுமதி வழங்கியவுடன் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...