புதிய உலக சாதனை படைத்த பாகிஸ்தானின் அதிரடி வீரர் முஹம்மத் ரிஸ்வான்..!

Date:

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான T20 தொடர் இடம்பெற்றது.

இந்த போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரிஸ்வான் ஒரு உலக சாதனை படைத்துள்ளார்.

ஒரு ஆண்டில் டுவென்டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றுக் கொண்ட

வீரர் எனும் உலக சாதனை இன்று ரிஸ்வானால் படைக்கப்பட்டது.

மொகமட் ரிஸ்வான் இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 8 அரைச்சதம் அடங்கலாக 752 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

சராசரி 94 ஓட்டங்களாக காணப்படுகிறது, 140 க்கும் அதிகமாக Strike Rate உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் இந்த ஆண்டு நிறைவுக்கு வருவதற்கு 5 மாதங்கள் இருப்பதால் இன்னும் அதிகமான ஓட்டங்களை ரிஸ்வானால் குவிக்க முடியும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...