புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு!

Date:

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், பொது சேவைகள் இடம்பெறும் முறைமை மற்றும் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பான புதிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.இதற்கமைய, வீட்டிலிருந்து ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் மாத்திரம் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் வரையறுக்கப்பட்ட நிதி நடவடிக்கைகளையும், பல்பொருள் அங்காடிகள், அத்தியாவசிய சேவைகள் என்பனவற்றை இணையம் மூலம் முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வெதுப்பக உற்பத்திகள், கடலுணவு விநியோகம் என்பனவற்றை நடமாடும் சேவையில் முன்னெடுக்க முடியும்.இதேநேரம், கொவிட் அல்லாத மரணங்களின் இறுதிக் கிரியைகள், 24 மணிநேரத்திற்குள் இடம்பெற வேண்டும் என்றும் புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகன பழுதுபார்ப்பு நிலையங்கள், ரயர் சேவைகள் என்பனவற்றை அத்தியாவசியமான ஊழியர்களுடன் முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...