ரிஷாட் பதியூதீனின் மைத்துனருக்கு பிணை

Date:

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மைத்துநர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு − கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, இவ்வாறு பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய ஹிஷாலினியின் மரணத்தை அடுத்து, ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், 2016ம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் ஒன்று தொடர்பில் அன்றைய தினமே, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...