ஸ்மார்ட் தடுப்பூசி இலத்திரனியல் சான்றிதல் அட்டையை விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்!

Date:

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டதை உறுதிப்படுத்தும் ஸ்மார்ட் தடுப்பூசி (Smart Vaccination Certificate) இலத்திரனியல் சான்றிதல் அட்டையை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சும் உலக சுகாதார அமைப்பும் (இலங்கை) இணைந்து கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்துவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA )நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சான்றிதழ் தற்போது வெளிநாடு செல்பவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது.மேலும், தடுப்பூசி வழங்கப்பட்டதற்கான பதிவு செய்த அட்டையை தவறவிட்டவர்கள் யாராயினும் இருப்பார்களாயின், அவ்வாறானோர் தாம் வசிக்கும் பகுதியின் பொது சுகாதார பரிசோதகருடன் தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெற்று கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, https://covid-19.health.gov.lk/certificate/ இணைய தளத்தில் பிரவேசித்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அந்த சான்றிதழைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே இந்த Smart Vaccination Certificate அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...