இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் – மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி!

Date:

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர், மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் டெல்லி- செங்கோட்டைக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடியை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் வைத்தியர் அஜய் குமார் ஆகியோர் வரவேற்றனர்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.மேலும் தேசியக்கொடி ஏற்றும் போது முதல் முறையாக இரு விமான படை விமானங்கள் ஊடாக மலர்கள் தூவப்பட்டமை சிறப்பம்சமாகும்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...