இந்தியாவை விட பயங்கரமான நிலையில் இலங்கை-நாமலின் 10000 கட்டில்கள் எங்கே? விமலின் ICU கட்டில்கள் எங்கே? -இம்ரான் எம்.பி கேள்வி! 

Date:

கொரோனா தாக்கத்தில் இந்தியாவைவிட பயங்கரமான நிலையில் இலங்கை காணப்படுவதாகவும் நாமல் ராஜபக்ச கூறிய 10000 கட்டில்கள் எங்கே, விமல் வீரவம்ச கூறிய அதிதீவிர சிகிச்சை கட்டில்கள் எங்கே? என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார்.

கடந்த செவ்வாய்கிழமை(10) கிண்ணியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 

கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் தாக்கம் இன்று இலங்கையில் உச்சம் தொட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் காணப்பட்டதை விட பயங்கரமான நிலையில் இலங்கை உள்ளது.

 

வைத்தியசாலைகளில் இடமில்லை தீவிர சிகிச்சை பிரிவில் இடமில்லை நோயாளிகள் வைத்தியசாலை வளாகத்தில் தரையில் ஓட்ஸிசன் சிலிண்டருடன் உறங்கும் புகைப்படங்கள் தொடர்ச்சியாக காண கிடைக்கிறது

 

ஆனால் நாமல் ராஜபக்ச அண்மையில் 10000 கட்டில்களை கையளித்ததாக கூறினார் விமல் வீரவம்ச அதி தீவிர சிகிசிச்சை கட்டில்களை தயாரித்ததாக கூறினார்.நோயாளிகள் தரையில் உறங்கும் போது இவை எதனையும் காணவில்லை.

இறப்புக்களின் எண்ணிக்கை நாளாந்தம் நூற்றை தாண்ண்டுகிறது ஆனால் அரசால் கூறப்படும் இறப்புக்களின் எண்ணிக்கையை விட இது அதிகமாக இருக்கலாம் என் கூறப்படுகிறது.ஜனாதிபதிக்கு கூட பிழையான எண்ணிக்கை வழங்கும்போது இது எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்.

 

இன்று பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மூன்று வேளையும் உண்ட மக்கள் ஒரு வேளை கூட உண்ண முடியாமல் தவிக்கின்றனர்.பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு.பால்மா இல்லை.இப்போது சமையல் எரிவாயுவும் இல்லை.எரிவாயுவுக்காக மிக நீண்ட வரிசையில் சிலிண்டர்களுடன் பல மணி நேரம் வீதியில் காத்து கிடைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...