கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய புகையிரத சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்றைய தினத்தில் மாகாணங்களுக்கு இடையில் 30 புகையிரத சேவைகள் இடம்பெறும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அரச சேவையாளர் வழமைப்போன்று இன்று பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் விசேட தொடருந்து சேவைகளும் இடம்பெறவுள்ளன. அத்துடன், எதிர்வரும் நாட்களில் தேவை ஏற்படும் பட்சத்தில் மேலும் புகையிரத சேவைகளை அதிகரிக்கவுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.