இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாட்டில் ‘தமிழா் மறுவாழ்வு முகாம்’!

Date:

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை(28) தெரிவித்தாா்.

வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

மானியக் கோரிக்கையில் இப்போது உறுப்பினா் பேசும் போதும், நேற்றைய முன்தினம் (வெள்ளிக்கிழமை) நான் அறிவிப்புகளை வெளியிடும் போதும் இலங்கை தமிழா்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. அகதிகள் முகாம் இனி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும். ஏனென்றால் அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்ல. நாம் அவா்களுக்குத் துணையாக இருக்கிறோம். அந்த உணா்வுடன் அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என்று அழைக்க அரசு ஆணையிட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்: கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு!

இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே இன்று காலை...

தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை இன்று (06) முதல் ஆரம்பிப்பதற்குத்...

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: மோதல் நிலை குறித்து விசாரிக்க விசேட குழு!

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் நேற்றைய (05) தினம் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்...

நாட்டின் சில இடங்களில் சிறிதளவில் மழை

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...