கண்டி உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Date:

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.மேலும், மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கண்டி நகர், பேராதனை உள்ளிட்ட பல பகுதிகளின் தாழ் நிலப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதேவேளை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...