கண்டி உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Date:

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.மேலும், மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கண்டி நகர், பேராதனை உள்ளிட்ட பல பகுதிகளின் தாழ் நிலப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதேவேளை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...