நேற்றைய தினம் (11) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் நேற்றைய தினம் 468 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர்.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 310 பேரும் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 221 பேரும் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.
அதனடிப்படையில் நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 2,987 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவர்களுள் 97 பேர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.