கிழக்கு ஆயுர்வேத பொது மருத்துவமனை கோவிட் நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஆளுனர் பணிப்பு

Date:

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (10) காலை உள்ளூர் மருத்துவம் மூலம் ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள கப்பல்துறை, கிண்ணியா, புதுக்குடியிருப்பு  ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைகள் வழங்கப்படும்.

இன்று (10) காலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மாகாண ஆயுர்வேத ஆணையாளர்  டாக்டர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் ஆளுநருக்கு இடையிலான கலந்துரைமாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் இருக்கும் குறைபாடுகளை ஆராய்ந்து, அந்த குறைபாடுகளை விரைவாக நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி, இந்த மருத்துவமனைகளில் 270 கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹஸ்பர் ஏ ஹலீம்_

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...