கொவிட்டுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட முதல் மரபணு தடுப்பூசி ‘சைகோவ் – டி” இந்தியாவில் அறிமுகம்!

Date:

‘சைடஸ் கெடிலா’ நிறுவனம் தயாரித்துள்ள, ‘சைகோவ் – டி’ தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று(20) அங்கீகாரம் அளித்துள்ளது.

12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ்-டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் அஹமதாபாத்தை சேர்ந்த சைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. மூன்று, ‘டோஸ்’களாக செலுத்தப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம், சைடஸ் கெடிலா நிறுவனம் சமர்ப்பித்தது.அதை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில், அதன் கோரிக்கையை ஏற்று, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, சைகோவ்-டி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு நேற்று ஒப்புதல் அளித்தது. உலகிலேயே, கொரோனா வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்டு உள்ள முதல் மரபணு தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...