கொவிட் பரவலில் இலங்கை 15ஆவது இடத்தில் இருந்தும் அரசாங்கம் இன்னும் அதன் பாரதூரத்தை விளங்கவில்லை – எதிர்க் கட்சித் தலைவர்!

Date:

கொடூரமான கொரோனா பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் இருந்தாலும், மனச்சாட்சியற்ற ஆட்சியாளர்கள் அதை இன்னும் கவனத்திற் கொண்டு செயற்படவில்லை என எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை சுகாதார விஷேட நிபுணர்களின் தீர்க்கமான எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு, அரசாங்கம் தனது பொறுப்பற்ற, தன்னிச்சையான அரசியல் நிகழ்ச்சி நிரலை மட்டுமே செயல்படுத்தி வருகிறது.

குறுகிய காலத்திற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதோடு,

அவர்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படாவிட்டால், இலங்கையில் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் 30,000 ஆக உயரும் என்று எதிர்வு கூறியுள்ளது.

இந்த பேரழிவின் தருணத்தில் இருக்கும் கடுமையான ஆபத்தை கருத்தில் கொண்டு, எமது வல்லுநர்கள் நாட்டை ஒரு குறுகிய காலத்திற்கு முடக்க வேண்டும் என்று எச்சரித்தனர், ஏனென்றால் மக்களின் வாழ்க்கை வேறு எதையும் விட எங்களுக்கு முக்கியம் என்றதாலாகும் என அவர் கூறினார்.

இருப்பினும், ஒரு நாளைக்கு இறப்புகளின் எண்ணிக்கை 150 ஐத் தாண்டினாலும்,இனம்காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டினாலும், அவர்கள் எடுக்கும் முடிவுகளிலிருந்து அரசாங்கம் சிறிதளவேனும் கருத்திற் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...