சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு 780 மில்லியன் டொலர் நிதி!

Date:

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் பலப்படுத்துவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, பணமாக மாற்றக்கூடிய S.D.R எனப்படும் விசேட மீள்செலுத்துதல் உரிமைகளின்படி,780 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், 300 மில்லியன் டொலர் கடனாக வழங்கவுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படவுள்ள குறித்த கடன் தொகையானது, இன்று (31) நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இந்த நிதி கிடைப்பதன் மூலம், நாட்டின் அந்நிய செலாவணி சந்தையின் பணப்புழக்கமும், ஸ்திரத்தன்மையும் பரிமாற்ற விகிதத்தின் மூலம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...