சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராய்வு!

Date:

சிலாபம் கொக்கவில தடுப்பூசி வழங்கும் மையத்தில் 12-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைசர் (phizer) பயோஎன்டெக் (BioNTech) கொவிட் -19 தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக சிறப்பு ஆலோசகர் வைத்தியர் தினுஷா பெர்னாண்டோ கூறியுள்ளார்.

நெருங்கிய நண்பர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் தடுப்பூசியை பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ளதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட ஏராளமான மக்களுக்கு நேற்று தடுப்பூசி மையத்தில் ஃபைசர் தடுப்பூசியைப் பெற முடியாமல் போயுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலாபம் கொக்கவில அரச பாடசாலையின் தடுப்பூசி மையத்தில் நேற்று ஒரு மருத்துவரின் குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் சுகாதார அலுவலர் (MOH) துறையுடன் இணைந்த வைத்தியர் அருள்தேவி அருணாசலம் இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...