டெல்டா வேரியன்ட் ஆபத்தும் அபாய அறிவிப்பும் | தேசிய சூரா சபை!

Date:

இன்றைய நிலையில் வைத்தியசாலைகள் கொரோனா நோயாளர்களால் நிரம்பி வழிகின்றன. கொரிடோர்களில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இலங்கையில் கொரோனாவினால் இறந்தவர்களது தொகையில் எமது சமூகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1500 தாண்டி உள்ளது.

இது நாம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

டெல்டா வேரியண்ட் எனப்படும் கோவிட் வைரஸின் புதிய திரிபு மிகவும் வீரியம் மிக்கதாகையால் எம்மை பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

1. அத்தியாவசிய தேவைகளுக்கன்றி வீடுகளை விட்டு வெளியேறலாகாது.

2. குடும்ப சந்திப்புகளை குறைத்துக் கொள்வதோடு அத்தியாவசிய சந்திப்புகளின் போது இறுக்கமான மாஸ்க் அணிதல் கட்டாயமாகும்.

3. *மரண வீடுகள், திருமண வீடுகள் இறுக்கமான மூடிய அறைகள்* கோவிட் தொற்றுதல் பரவும் அபாய இடங்களாக இனம் காணப்பட்டுள்ளன.

4. பல பிரதேசங்களில் இவ்விடங்கள் அதிக தொற்றாலாளர்களை உருவாக்கியும் உள்ளன.
முடிந்த வரை இவ்விடங்களைதவிர்ப்பது நல்லது.

5. இவ்வாறான இடங்களில் சுகாதார நடைமுறைகள் கண்டிப்பாக பேணப்படல் வேண்டும்.

6. அந்தந்த பிரதேச களநிலவரங்களைப் பொறுத்து சுகாதார பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பெற்று மஸ்ஜித் நிர்வாகங்கள் மக்களை வழிநடாத்த வேண்டும்.

அந்த வகையில் சில பிரதேசங்களில் சுயமாகவே ஜூமுஆ மற்றும் ஜமாத் தொழுகைகள் விடயத்தில் மஷூரா செய்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலைகளில் இடமின்மையால் நோயறிகுறி தெரிபவர்களை இனி வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்க அரசு தீர்மானித்து வழிகாட்டல் சுற்று நிருபம் வெளியிட்டுள்ளது. அவற்றை அறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

வல்லவன் அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் கட்டளைக்கு அடிபணிந்து நல்லடியார்களாக வாழ்ந்து மரணிப்பதற்கு அருள் புரிவானாக.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...