தாலிபான்கள் காபூலை கைப்பற்றியதால் பெண் உரிமை ஆர்வலர் மலாலா கவலை!

Date:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசப்சாய், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பெண் கல்விக்கான பிரச்சாரத்திற்காக பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்ட உரிமை ஆர்வலரான மலாலா உலகளாவிய மற்றும் பிராந்திய சக்திகளை உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து பொதுமக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“ஆப்கானிஸ்தானை தலிபான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் நாங்கள் முழு அதிர்ச்சியுடன் இதனை பார்க்கிறோம். பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமைகள் மற்றும் வழக்கறிஞர்கள் குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் சக்திகள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் மற்றும் அகதிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும், எனவும் ட்வீட்டர்  மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...