தொடரும் ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம்!

Date:

வேதன பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி 4 பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் இன்று (04) கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

நீர்கொழும்பு வீதியின் வெலிசரை, கண்டி வீதியின் கடவத்தை அதிவேக வீதி நுழைவாயில், ஹைலெவல் வீதியின்கொட்டாவை, காலி வீதியின் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த வாகன பேரணிகள் ஆரம்பமாகவுள்ளன.

 

இன்று முற்பகல் குறித்த பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் புறப்பட்டு,பிற்பகல் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

 

கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸுக்கும், அதிபர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

 

இந்நிலையில் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...