தொடரும் ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம்!

Date:

வேதன பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி 4 பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் இன்று (04) கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

நீர்கொழும்பு வீதியின் வெலிசரை, கண்டி வீதியின் கடவத்தை அதிவேக வீதி நுழைவாயில், ஹைலெவல் வீதியின்கொட்டாவை, காலி வீதியின் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த வாகன பேரணிகள் ஆரம்பமாகவுள்ளன.

 

இன்று முற்பகல் குறித்த பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் புறப்பட்டு,பிற்பகல் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

 

கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸுக்கும், அதிபர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

 

இந்நிலையில் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...