நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரச நிகழ்வுகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளன.
இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை மரண வீடொன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
It is better to stop wedding functions completely or allow only 15 the maximum and funeral occasions only 10.Please assign Police officers to patrol congested Mudukkus, Thottams, Wattes on daily basis to confine peoples to their homes without roaming and vi next door please.