பலாங்கொடை நகருக்கு 5 நாட்களுக்கு பூட்டு!

Date:

பலாங்கொடை நகரில் உள்ள மருந்தகங்கள் மற்றும் ரயர் கடைகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் நாளை (18) தொடக்கம் 22ஆம் திகதிவரை மூடப்படுவதாக பலாங்கொடை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் கலந்துரையாடல் இன்று (16) இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அச்சங்கத்தின் தலைவர் நகரசபை உறுப்பினர் லால் கலப்பதிதி
தெரிவித்தார்.

இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதன்
ஊடாக நகருக்கு வருகைத்தரும் மக்களின்
எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியுமெனவும்,
இதனூடாக கொரோனா வைரஸ் பரவலைக்
கட்டுப்படுத்த முடியுமெனவும் நம்பிக்கை
வெளியிட்டார்.

அத்தோடு, வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...