பாடசாலைகள் திறக்கப்படுமா? | அமைச்சர் G.L.பீரிஸ்

Date:

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, பாடசாலைகளை திறக்க முடியாது என கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார் .

மேலும், நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் அசாதாரய சூழ்நிலை காரணமாக, முன்னர் திட்டமிட்டவாறு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் பாடசாலைகளை திறக்க முடியாது என அவர் கூறியுள்ளார். கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த போதிலும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும், சுகாதார தரப்பு அனுமதி வழங்கியவுடன் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...