புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு!

Date:

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், பொது சேவைகள் இடம்பெறும் முறைமை மற்றும் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பான புதிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.இதற்கமைய, வீட்டிலிருந்து ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் மாத்திரம் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் வரையறுக்கப்பட்ட நிதி நடவடிக்கைகளையும், பல்பொருள் அங்காடிகள், அத்தியாவசிய சேவைகள் என்பனவற்றை இணையம் மூலம் முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வெதுப்பக உற்பத்திகள், கடலுணவு விநியோகம் என்பனவற்றை நடமாடும் சேவையில் முன்னெடுக்க முடியும்.இதேநேரம், கொவிட் அல்லாத மரணங்களின் இறுதிக் கிரியைகள், 24 மணிநேரத்திற்குள் இடம்பெற வேண்டும் என்றும் புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகன பழுதுபார்ப்பு நிலையங்கள், ரயர் சேவைகள் என்பனவற்றை அத்தியாவசியமான ஊழியர்களுடன் முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...