பேருந்துகள் தொடர்பில் இன்று முதல் விஷேட தேடுதல் நடவடிக்கை!

Date:

சுகாதார வழிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்ற அனைத்து பஸ் சாரதிகள் மற்றும் உதவியாளர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

நாடு பூராகவும் இன்று முதல் இதுதொடர்பான தேடுதல் நடவடிக்கையை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சினால் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்கின்ற அனைத்து இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள், தனியார் பஸ்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதை தொடர்ந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் கடந்த 3 நாட்களுக்குள் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி பயணிகளை அழைத்து செல்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடே இதற்கு காரணம் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...