போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது!

Date:

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இரண்டு பேர் கிராண்ட்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அத்துடன் நாணயத் தாள்களை அச்சிடப் பயன்படும் இயந்திரமொன்றும், 100 ரூபா நாணயத்தாள்கள் 25 உம், 500 ரூபா நாணயத்தாள்கள் 18 உம், ஒரு 1,000 ரூபா நாணயத்தாளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இவ்வாறு கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி 12,500 ரூபாவுக்கும் அதிகம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.100 ரூபா, 500 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் மக்கள் அதிகம் கவனம் செலுத்தாததால் குறித்த சந்தேக நபர்கள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

எனவேஇ பொதுமக்கள் தங்கள் அன்றாட பண பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது பயன்படுத்தும் நாணயத்தாள்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...