மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளில் யார் யாருக்குக்கு பயணிக்க அனுமதி

Date:

மக்களின் அத்தியாவசிய சேவைகளை உரிய வகையில் முன்னெடுக்கும் நோக்கில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் இடம்பெற்று வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். இதன்படி, ரயில் மற்றும் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய சேவைக்கு செல்லும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னரே ரயிலில் செல்ல அனுமதி வழங்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளின் பிரகாரம், ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்கு ஏற்ப, மாகாணங்களுக்கு இடையிலும், மாகாணங்களுக்குள்ளும் ரயில் சேவைகள் காலை மற்றும் மாலை வேளைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறுகின்றார்.

அத்தியாவசிய சேவைகளை இலக்காக கொண்டு, 40 வீதமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையில் கடமையாற்றும் சுமார் 300 பேர், கொவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதனால், ஊழியர்களை வெவ்வேறாக அழைத்து, சேவைகளில் ஈடுபடுத்தி வருவதாகவும் கிங்ஸிலி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...