மோட்டார் வாகனத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

Date:

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் நாராஹேனபிட்டி மற்றும் வேரகல அலுவலகங்களின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

திணைக்கள பணியாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இதற்கான காரணமாகும். தொலைபேசியின் மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சி கே அலஹகோன் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை பதிவு செய்தல் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக 0707 677 877 என்ற தொலைபேசியின் ஊடாகவும், சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பாக 0707 677 977 என்ற தொலைபேசியின் ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும்.

இதேவேளை, தென், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. காலாவதியாகும் வருமானவரிப் பத்திரத்திற்காக அவற்றை புதுப்பிக்கும் போது அதற்கான தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...