வைத்திய ஆலோசனைகளுக்கு அமைய சுய முடக்க நிலையை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

Date:

வைத்திய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய சுய முடக்க நிலையை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து கட்சிகளும் பொதுமக்களிடம் கோரியுள்ளன.

கூட்டு ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த கட்சிகள் இதனை குறிப்பிட்டுள்ளன.

குறைந்த பட்சம் எதிர்வரும் தீர்மானமிக்க 10 நாட்களுக்கு இதனை செயற்படுத்துமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்திடம் மக்களின் உயிர்களை காப்பாற்ற எவ்வித திட்டங்களோ அல்லது தேவையோ இல்லை என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சித் தலைவர்களான ரஹூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் அமீர் அலி ஆகியோரின் கையெழுத்துடன் குறித்த கூட்டு ஊடக அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...