வைத்திய ஆலோசனைகளுக்கு அமைய சுய முடக்க நிலையை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

Date:

வைத்திய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய சுய முடக்க நிலையை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து கட்சிகளும் பொதுமக்களிடம் கோரியுள்ளன.

கூட்டு ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த கட்சிகள் இதனை குறிப்பிட்டுள்ளன.

குறைந்த பட்சம் எதிர்வரும் தீர்மானமிக்க 10 நாட்களுக்கு இதனை செயற்படுத்துமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்திடம் மக்களின் உயிர்களை காப்பாற்ற எவ்வித திட்டங்களோ அல்லது தேவையோ இல்லை என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சித் தலைவர்களான ரஹூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் அமீர் அலி ஆகியோரின் கையெழுத்துடன் குறித்த கூட்டு ஊடக அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...