நாட்டில் உள்ள 18 – 30 வயதுக்குட்பட்ட இலங்கையர்களுக்கு செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.நேற்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமித கினிகே இதை தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் 3.2 மில்லியன் பேர் உள்ளதாகவும் தெரிவித்த அவர், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாக குறிப்பிட்டார்.