JUST IN:ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேற்றம்!

Date:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான அல் ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது

ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ இருப்பு முடிந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது  பின்வருமாறு அவர் தெரிவித்தார்,

கடந்த 17 நாட்களில் எங்கள் படைகள் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்தை இயக்கி 1,20,000 அமெரிக்க குடிமக்கள், எங்கள் நட்பு நாடுகளின் குடிமக்கள் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிய நட்புறவாளர்களை வெளியேற்றின.ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ இருப்பு முடிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் 31 அதிகாலையில் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுகின்றன.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கர்கள், ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு பாதுகாப்பான வழியை உறுதி செய்வதற்காக எங்கள் சர்வதேச நட்பு நாடுகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைக்க தலைமை வகிக்குமாறு நான் வெளியுறவு செயலாளரிடம் கேட்டுக் கொண்டேன். இன்று நிறைவேற்றப்பட்ட UNSC தீர்மானம் இதில் அடங்கும்.நாளை பிற்பகல், ஆப்கானிஸ்தானில் எங்கள் இருப்பை ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்ற எனது முடிவை மக்களுக்கு எடுத்துரைக்கிறேன். திட்டமிட்டபடி எங்கள் விமானப் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவர கூட்டுத் தலைவர்கள் மற்றும் எங்கள் தளபதிகள் அனைவரின் ஒருமித்த பரிந்துரை இது.

தலிபான்கள் பாதுகாப்பான பாதையில் உறுதிமொழிகளைச் செய்துள்ளனர். மேலும் உலகநாடுகள் அவர்களை தங்கள் கடமைகளுக்குக் கட்டுப்படுத்தும். ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் ராஜதந்திரம் இதில் அடங்கும். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவோருக்காக விமான நிலையத்தை மீண்டும் திறக்க தலிபான்களுடன் ஒருங்கிணைப்புடன் செயல்படுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

fb://photo/10160248727398690?set=a.10150243828793690

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...