அதிபர்-ஆசிரியர் சங்கத்தினருக்கு அமைச்சரவை உபக்குழு அழைப்பு!

Date:

ஆசிரியர் ,அதிபர்களின் வேதன முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு தமது தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.அதன் பிரதிநிதி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை குறிப்பிட்டார்.

இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய் கிழமை முரண்பாடுகள் குறித்து அமைச்சரவை உபக்குழுவில் அறிவிக்குமாறு தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.சந்திப்பு அன்றைய தினம் மாலை 6 மணியளவில் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி அதிபர் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை 34வது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...