இன்று நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம்!

Date:

புகையிரத திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

அதன்படி அந்த சங்கத்தினால் பொதுமக்களுக்கு கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாளை(13) வெள்ளிக்கிழமை புகையிரத சேவைகள் இடம்பெறாது என்றும், புகையிரதத்திற்காக காத்திருக்க வேண்டாம் எனவும் புகையிரத திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நிலையப் பொறுப்பதிகாரிகள், கனிஷ்ட பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான எந்த ஏற்பாட்டினையும் அரசாங்கம் செய்யவில்லை என்று அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலைமையினால் புகையிரதங்களில் பயணிப்பவர்களுக்கு கடும் பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...