உலகில் 135 நாடுகளுக்குள் நுழைந்தது டெல்ட்டா வைரஸ்!

Date:

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட, மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகைக் கொரோனா 135 நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, ஆல்ஃபா வகை கொரோனா உலகின் 132 நாடுகளிலும் பீட்டா வகை கொரோனா 81 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்ஃபா வகை கொரோனா 182 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா இதுவரை 135 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புதிதாக கொரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்து ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை மட்டும் 40 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மத்தியதரை, மேற்கு பசிபிக் பிராந்திய நாடுகளில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சர்வதேச அளவில் அந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

புதிய கொரோனா தொற்று கிழக்கு மத்தியதரைப் பிராந்தியத்திலும் 37 சதவீமும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 33 சதவீதமும் அதிகரித்துள்ளது.

தென்-கிழக்கு ஆசியப் பகுதிகளில் புதிய கொரோனா தொற்று 9 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...